வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக இருக்கணும்னா உங்க வீட்டு வாசல்ல முருங்கை மரத்தை நட்டு வைங்க!

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் விதைகளில் ஃப்ளாவினாய்டுகள், பாலிஃபினால், அஸ்கார்பிக் அமிலம் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்துள்ளன.


முருங்கைப் பூக்கள் மற்றும் விதைகளை விட முருங்கைக் கீரை சாற்றில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் செயல்பாடுகள், ஒற்றை மின்னணு உருபுகளை சுத்திகரிக்கும் ஆற்றல், கொழுப்பு சேர்வதை அதிக அளவில் தடுக்கும் திறன், புரதம் மற்றும் டிஎன்ஏ ஆக்சிடேஷன் அதிக அளவில் இருக்கிறது.

இது நீரிழிவு நோயின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. முருங்கை இலை பவுடர் உடலில் கொழுப்புகள் மற்றும் குளுக்கோஸ் அளவுகளை குறைப்பதில் திறம்பட செயல்பட்டு நீரிழிவு நோயாளிகளின் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. அதாவது இது ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவை குறைத்து செல்கள் சேதம் அடைவதற்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

முருங்கை மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு அறிவாற்றலை மேம்படுத்துகிறது ஏனென்றால் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் மூளை நரம்புகளைத் தூண்டும் மூலக்கூறுகள் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இதில் அதிக அளவில் அடங்கியிருக்கும் விட்டமின் ஈ மற்றும் சி நரம்புகளில் சீர்கேடு விளைவிக்கும் ஆக்ஸிஜனேததிற்கு எதிராக போராடி, மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 

முருங்கையிலை ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் பொருட்களை கொண்டுள்ளதால் தோல் மற்றும் இரத்தத்தில் நோய்த்தொற்றுக்கு காரணமான பூஞசைகள் மற்றும் இரத்தம், சிறுநீர் பாதை தொற்று மற்றும் சீரண பிரச்சனைகளுக்கு காரணமான பாக்டீரியாக்களை எதிர்த்து சிறப்பாக போராடும்.