பரீட்சைக்கு நேரமாச்சு! தந்தையுடன் பைக்கில் சென்ற மகளுக்கு ஏற்பட்ட பயங்கரம்! கதறும் குடும்பம்!

வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தந்தை மற்றும் மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு 19 வயதில் திவ்யபிரியா என்ற மகள் இருக்கிறார். வ்யபிரியாவிற்கு திருச்சியில் தேர்வு இருப்பதால், அவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்த வேல்முருகன் வேப்பூர் அருகே உள்ள சர்க்கரை ஆலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக கோழிகளை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரி திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதனால் நிலைகுலைந்த வேல்முருகன் வண்டியுடன் கீழே விழுந்ததால், இருவரும் விபத்துக்குள்ளானர். இந்த விபத்தில் வேல்முருகன் மற்றும் திவ்யபிரியா இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் ரத்தம் கசிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து ஏற்படுத்திய மினி லாரியை வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். தந்தை மகள் இருவரையும் ஒரே விபத்தில் இழந்த பெரும் துயரத்தில் குடும்பத்தினர் ஆழ்ந்துள்ளனர்.