மீன் குழம்பு, இறால் வறுவல் ஸ்பெசல்! சுந்தரி அக்கா தான் இனி டாப்! மனது வைத்த அதிகாரிகள், மகிழ்ந்த வாடிக்கையாளர்கள்!

சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான "சுந்தரி அக்கா" கடைக்கு தரமான உணவு கொடுப்பதாக தமிழக அரசு அங்கீகார சான்றிதழ் வாங்கியுள்ளது.


சென்னையில் மிகவும் பிரபலமாக உள்ள மெரினா கடற்கரையில் சுந்தரி அக்கா கடை உள்ளது. அந்த கடையில் மீன் குழம்பு ,மட்டன், மீன் வறுவல் போன்ற உணவு வகைகள் பரிமாறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு வருபவர்கள் அனைவருமே இந்தக் கடையில் சாப்பிடாமல் செல்ல மாட்டார்கள்.

இந்தக் கடையின் உரிமையாளர் சுந்தரி பல நாட்களாக கடையை நடத்தி வருவதால் காலப்போக்கில் "சுந்தரி அக்கா"கடை என்று பெயரானது. இதையடுத்து மாலை நேரத்தில் மெரினா பீச்சுக்கு வரும் கூட்டம் பாதி அளவு சுந்தரி அக்கா கடை முன்பு குவிந்து கிடக்கின்றனர். சுந்தரி அக்கா கடையில் சாப்பிடுவதற்காகவே பலர் மெரீனா பீச்சிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் சுந்தரி அக்கா கடைக்கு தமிழக அரசு அளித்திருக்கும் அங்கீகாரம் அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் இருந்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் இருந்தும் இவரது கடைக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதாக அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள சான்றிதழில் மிகவும் தரமான தெருக்கடை உணவு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி கேட்டதும் சுந்தரி அக்கா மிகவும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துள்ளார். இது குறித்து அவரிடம் பேசியபோதும் தனது கடைக்கு இந்த மாதிரியாக ஒரு தரமான சான்றிதழ் வழங்கியதற்கு கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தான் காரணம் எனவும் இந்த சான்றிதழை தன் வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலும் தனது கடையில் உணவை தரமாகவும் ருசியாகவும் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பேன் எனவும் உறுதி கூறியுள்ளார். இந்நிலையில் இது போன்ற சான்றிதழ்கள் உணவின் தரம் குறித்த நம்பகத்தன்மையை அதிகரிப்பதாக அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.