நான் இறந்தால் யாரும் கண்ணீர் சிந்தாமல் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கூறியதால் அவரது இறுதிச்சடங்கில் எல்லோரும் சிரித்த நெகிழ்ச்சியான சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது.
பரிதாபமாக உயிரிழந்த ராணுவ வீரன்! இறுதிச்சடங்கில் சிரித்து மகிழ்ந்த உறவுகள்! அதிர்ச்சி காரணம்!
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஷே பிராட்லி அயர்லாந்து நாட்டின லீனெஸ்டர் மாகாணத்தில் வசித்து வந்த நிலையில் அக்டோபர் 12ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
அவர் இறக்கும் தருவாயில் தனது கடைசி ஆசையை ஆடியோவாக பதிவு செய்திருந்தார். அதில், தன்னுடை உடலை அடக்கம் செய்யும்போது யாரும் அழக்கூடாது. அதற்கு பதிலாக சிரித்து மகிழ வேண்டும் என தெரிவித்திருந்தார். இது மட்டுமின்றி மயானத்தில் தன்னை அடக்கம் செய்யும்போது அனைவரும் சிரிப்பதற்கான ஏற்பாட்டை செய்து விட்டு உயிரிழந்தார்.
அவர் பேசிய அந்த ஆடியோ அவரது மகள் ஆன்டிரியா வெளியிட்டிருந்தார். இதை அடுத்து ஷே பிராட்லியின் இறுதிச்சடங்கின் போது, அவரது சவக்குழிக்கு அருகில் ஒலிப்பெருக்கி மூலம் அந்த ஆடியோவை ஆன்டிரியா ஒலி பரப்பினார். அதில், “நான் எங்கே இருக்கிறேன்? இது மிகவும் இருட்டாக இருக்கிறது. என்னை வெளியே விடுங்கள்” என ஷே பிராட்லி பேசியிருந்தார்.
இதை கேட்டு அங்கு கூடியிருந்த ஷே பிராட்லியின் உறவினர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
என்னதான் ஷே பிராட்லியின் இறுதி ஆசையாக இருந்தாலும், மயானத்தில் சிரித்தவர்கள் மனதில் அழுதுகொண்டுதான் இருந்தார்கள் கனத்த இதயத்தோடு.