தமிழக மக்களை பசி, பஞ்சத்தில் இருந்து காப்பாற்றும் பெரும் பொறுப்பை ரேஷன் கடைகளே செய்துவருகின்றன. ஆனாலும், பொருள் வாங்குவதற்கு ஒரு சில இடங்களில் சிக்கல் ஏற்படுகிறது. இதனை நிவர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்டவையே நடமாடும் ரேஷன் கடைகள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்த நடமாடும் ரேஷன் கடை திட்டம்.! ரேஷன் பொருட்கள் உங்கள் இனி வீட்டு வாசலில்!
ஆம், தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நகரும் நியாயவிலை கடை வாகனங்களை முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நகரும் நியாயவிலை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.