தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி.! தமிழ்நாடு உடற்பயிற்சி நிலையங்கள் திறக்க எடப்பாடி அனுமதி…

மத்திய அரசு ஆகஸ்ட் 5 முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கும் விளையாட்டு பயிற்சிகளுக்கும் அனுமதி கொடுத்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை தடை நிலவுகிறது.


இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலசங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள், சந்தித்தனர். அப்போது, கோரொனா காரணமாக மூடப்பட்டு கிடக்கும் தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சியகங்களைத் திறக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  

அவர்களுடைய கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அவர்கள் நன்மைக்காக ஓர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, மத்தியஅரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க ஆகஸ்ட் 5ந்தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல்முறைகள் தனியாக வெளியிடப்படும். அவற்றை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நேரில் சந்தித்தவுடன், தங்களுக்கு தீர்வும் உடனடியாக உத்தரவும் வழங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளனர்.