ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட கால்வாய்கள் மூலம் கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் ஒற்றைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாய பெருமக்களின் வேண்டுகோளை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி.

விவசாய பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட கால்வாய்கள் மூலம் கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் ஒற்றைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு 14.8.2020 முதல் 120 நாட்களுக்கு 23,846.40 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்கள், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.