சித்தர்கள், முனிவர்கள் தியானம் செய்து இறைவனை வழிபடுவது உண்டு. அந்தத் தியானத்தை மனிதர்கள் தினமும் செய்துவந்தால் பல்வேறு நோய்கள் கட்டுப்படும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
தியானம் செய்வது உண்மையிலே உடலுக்குப் பலன் தருமா??
* தினமும்
20 நிமிடங்கள் வரை
தியானம் செய்பவர்களுக்கு
மாரடைப்பு, பக்கவாதம்
போன்றவை வரும்
வாய்ப்பு 48 சதவிகிதம்
வரை குறைகிறது.
* தியானத்தால்
கோபம் கட்டுப்படுவதால்
ரத்தக் கொதிப்பு
மற்றும் மன
அழுத்தப் பாதிப்பும்
நீங்குகிறது. உடற்பயிற்சி
செய்யாமல் உடல்
எடை சீராக
கட்டுக்கோப்பாக இருப்பதற்கும்
தியானம் உதவுகிறது
என்று தெரிவிக்கிறார்கள்.
இதயத்தில் பாதிப்பு உள்ளவர்களுக்கு தியானம் செய்வதை ஒரு மருத்துவப் பயிற்சியாக பரிந்துரைக்கலாம் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தினமும் காலையில் செய்யப்படும் தியானம் கூடுதல் பலன் தருகிறதாம். எல்லோரும் முயற்சி செய்யலாமே...