காலமான உரிமையாளர்! சவப்பெட்டியை தட்டி தட்டி எழுப்பிய பாசக்கார நாய்! நெகிழ வைக்கும் சம்பவம்!

லிமா: சவப்பெட்டியில் வைக்கப்பட்ட தனது உரிமையாளரை வளர்ப்பு நாய் தட்டி தட்டி அழைத்த சம்பவம் நெகிழ செய்துள்ளது.


பெரு நாட்டின் லிமா நகரில் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் வழக்கம்போல நடைபெற்றன. ஆனால், கண்ணாடி பேழையில் வைக்கப்பட்ட அவரது சடலத்தை பார்த்து, அவரது வளர்ப்பு நாய் அதிர்ச்சி அடைந்தது.

தன்னுடன் தினமும் விளையாடிவந்த உரிமையாளர் அசையாமல் படுத்திருப்பதை பார்த்து, அந்த நாய் கண்ணீர் வழிய, கண்ணாடி பேழையை தட்டி தட்டி அழைத்தது.

அதனை பலரும் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றாலும் திரும்ப திரும்ப  அந்த நாய் அசையாமல் அதே இடத்தில் அமர்ந்தபடி தனது உரிமையாளரின் இறுதிச்சடங்கை கண்ணீர் மல்க வேடிக்கை பார்த்தபடி இருந்தது. 

இன்றைய காலத்தில் உறவினர்களே ஒருவன் உயிரிழந்துவிட்டால் கைகழுவி செல்லும் சூழலில், நன்றி மறக்காத நாயின் பாசப் போராட்டம் பற்றிய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.