பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

பொதுவாக பரீட்சை நேரத்தில் மாணவருக்கு குறைந்த அளவு உணவு கொடுத்தால் போதும், ஆனால், அது நிரம்பவும் சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டியது அவசியம் அப்போதுதான் வயிறு முட்ட சாப்பிட்ட நினைப்பு இல்லாமல், அதேநேரம் போதிய போஷாக்குடன் மாணவனால் பரீட்சை எழுத முடியும்.


மாணவனுக்கு பரீட்சை நேரத்தில் கொடுக்க வேண்டிய முக்கியமான கீரை வல்லாரை. ஆம், நினைவு திறன் மற்றும் புத்திக்கூர்மையை அதிகரிப்பதில் வல்லாரை கீரை சிறந்த முறையில் பயனளிக்கிறது.

நினைவுக் கூர்மையை அதிகரிப்பது மட்டுமின்றி மனதுக்கு புத்துணர்வு அளிக்கவும்,  தெளிவாக சிந்திக்கும் திறன் வளர்வதற்கும்  வல்லாரை கீரை உதவி செய்கிறது. மூளை தொடர்பான வேதியியல் மாற்றங்களை இந்தக் கீரை ஊக்குவிப்பதால், கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு இது அருமருந்தாகும்.  

பசலைக் கீரைக்கும் நரம்பு பலத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. உடலுக்கு வலிமை தரக்கூடியது அரைக்கீரை. சோர்வு போக்கும் சக்தி அரைக் கீரைக்கு உண்டு. அதனால் மாணவர்களுக்கு தினம் ஒரு கீரை கொடுத்தால் உடல் நலம் பெறுவதுடன் நல் ஆரோக்கியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்