சென்னைக்கு புதிய நீதிபதி வந்தாச்சு! இவர் யாருன்னு தெரியுமா?

இன்று, சென்னை உயர் நீதிமன்றதின் 30வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதிய தலைமை நீதிபதி சஹி க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றம் 1862ல் உருவாக்கப்பட்டதிலிருந்து 49வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் 30வது தலைமை நீபதியாகவும் ஏ.பி சஹி பொறுப்பேற்று உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா தலைமை நீதிபதியாக மாற்றியபோது, தனது மாற்றத்தைப் பரிசீலிக்கும்படி கோரிக்கை வைத்தார். ஆனால், அதனை கொலிஜியம் நிராகரித்தது.

அதனால் தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த செப்.21- அன்று, தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது. புதிய தலைமை நீதிபதி பொறுப்பு ஏற்கும் வரை மூத்த நீதிபதி வினித் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக வழக்குகளைப் பார்ப்பார் என உத்தரவிட்டது.

இதையடுத்தே சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏபி.சஹி பெயரை கொலிஜியம் பரிந்துரைத்தது. திரிபுரா தலைமை நீதிபதி சஞ்சய் கரோலை பாட்னா தலைமை நீதிபதி பதவிக்கு கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி பரிந்துரைத்தது.

அதன்படி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், மூத்த நீதிபதிகள், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகிய பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ஏ.பி.சஹி என்கிற அம்ரேஷ்வர் பிரதாப் சஹி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள தம்குஹி எனும் ராஜ வம்சத்தில் 1959-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்தவர். 1985-ல் சட்டப்படிப்பை முடித்த பின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். படிப்படியாக உயர்ந்து 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், 2005-ம் ஆண்டு நீதிபதியாகவும் பொறுப்பேற்றார்.

பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏ.பி.சஹி பொறுப்பேற்றார். 15 மாதங்கள் அங்கு பணியாற்றிய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இன்று பதவி ஏற்றுள்ளார்.