பேரீச்சம் பழத்துக்கும் ஞாபக சக்திக்கும் என்ன தொடர்புன்னு தெரியுமா?

பாலைவன பகுதியில் அதிகம் விளையக்கூடிய, பனை மரத்தின் வகையைச் சேர்ந்த பேரீச்சையில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ,பி,பி2,பி5 சத்துக்கள் நிரம்பியது.


எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாத தன்மை கொண்ட பேரீச்சம் பழத்தை குழந்தை முதல் பெரியவ்ர் வரையிலும் அனைவரும் சாப்பிடலாம்.

·         கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிரம்பியிருப்பதால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்கிறது.

·         பாலில் போட்டு கொதிக்கவைத்து சாப்பிட்டுவந்தால் மூட்டுவலி குறைந்து எலும்புகள் பலம் பெறும்.

·         தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டுவந்தால் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும். அத்துடன் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

·         குழந்தைகளுக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் தன்மையும் மூளைக்கு சுறுசுறுப்பு தரும் திறனும் பேரீச்சம் பழத்துக்கு உண்டு.

தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு பால் குடித்து படுத்தால் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் தீரும். உடலில் மினுமினுப்பு அதிகரிக்கும்.