பின்னி பெடலெடுத்து தன் மீதான விமர்சங்களுக்கு முற்று புள்ளி வைத்த தினேஷ் கார்த்திக்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் தினேஷ் கார்த்திக் தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று ஆடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 18வது ஓவர் வரை நிதானமாக ஆடினார்.

கடைசி 2 ஓவரில் தினேஷ் கார்த்திக் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிகளை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கதி கலங்க செய்தார். இவர் இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 97ரன்களை சேர்த்து கொல்கத்தா அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார்ராஜஸ்தான் அணியின் வருண் ஆரோன் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

  இவர் இந்த ipl தொடரில் சரியாக ரன்களை குவிக்காததால் இவர் மீது பல விமர்சனங்கள் குவிந்த வண்ணம் இருந்தது.இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலமாக தினேஷ் கார்த்திக் அவர் மீதான விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.