சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எப்போது தாம்பத்திய உறவு கொள்ளலாம்?

பொதுவாகவே குழந்தை பெற்றதும் கணவர் தன்னை புறக்கணித்துவிடுவார் என்ற அச்சம் நிறைய பேருக்கு உண்டு. குழந்தை பெற்றுள்ள பெண் மீது கணவனுக்கு அன்பு அதிகரிக்குமே தவிர குறையாது என்ற உண்மையை பெண் அறியவேண்டும்.


சிசேரியன் செய்துகொண்ட ஆறு வாரங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் விலகியிருப்பது தாய்க்கு நல்லதுஅடுத்த குழந்தைக்கு போதிய இடைவெளி வேண்டும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபிறகே தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதால் கருத்தரிப்பு நிகழாது என்பது முழு உண்மை அல்ல. இதனை நம்பி உறவுகொண்டு மீண்டும் கருத்தரிப்பதால் தாயின் உடல் பாதிக்கப்படும்.ரத்தக்கசிவு போன்ற பிரச்னை இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உறவில் ஈடுபட வேண்டும்.

தாம்பத்திய உறவு இன்பம் தருவதாக இருக்கவேண்டுமே தவிர, மீண்டும் குழந்தை உருவாகிவிடும் என்ற அச்சம் தருவதாக இருக்கக்கூடாது. அதனால் இந்த விஷயத்தில் ஆண், பெண் இருவரும் அவசரப்படாமல் நிதானமாகவே அணுகவேண்டும்.