ரேவ் பார்ட்டி! பிரபல நடிகர், நடிகைகள் மீது பகீர் புகார்! வைரல் வீடியோ! திரையுலகில் பரபரப்பு!

தீபிகா படுகோனே, ரண்பீர் சிங் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் போதை மயக்கத்தில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததற்கு கண்டனம் எழுந்துள்ளது.


பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர், தனது சினிமா நண்பர்களுக்காக, அவ்வப்போது போதையுடன் கூடிய பார்ட்டி நடத்துவது வழக்கம். இதன்படி, சமீபத்தில் தீபிகா படுகோனே, ரண்பீர் கபூர், வருண் தவான், விக்கி கவுசல்,  அர்ஜூன் கபூர், மலைகா அரோரா, ஷாகித் கபூர் உள்ளிட்டோரை அழைத்து, பார்ட்டி ஒன்றை கரண் ஜோஹர் அளித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நிகழ்ந்த இந்த பார்ட்டியில் போதைப்பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும்  வகையில் தீபிகா படுகோனே, ரண்பீர் சிங் உள்ளிட்டோர் போதையில் சுயநினைவில்லாமல் போஸ் தரும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. 

இந்த புகைப்படத்திற்கு, டெல்லி ராஜூரி கார்டன் தொகுதி எம்எல்ஏ சிர்ஸா கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர்கள் இப்படி முறைகேடான வகையில், சட்டவிரோதமான போதை மருந்துகளை பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், இதுபற்றி உரிய சட்ட நடவடிக்கை தேவை என்றும் சிர்ஸா வலியுறுத்தியுள்ளார். 

இந்நிலையில், அவரது கருத்தை, முன்னாள் எம்பி மிலிந்த் தியோரா மறுத்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''குறிப்பிட்ட பார்ட்டிக்கு எனது மனைவியும் சென்றிருந்தார். அங்கே எந்த போதை மருந்தும் பயன்படுத்தப்படவில்லை. சிர்ஸா தனது கருத்தை வாபஸ் பெறுவதோடு மன்னிப்பு கேட்க வேண்டும்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.