மத்திய சென்னை! மெர்சல் காட்டும் தயாநிதிமாறன்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.


இதில் தமிழக்த்தில்  மொத்தம் உள்ள 38 தொகுதிகளில், திமுக   கூட்டணி 29 தொகுதிகளிலும் , அதிமுக  கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தற்போது  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் லோக் சபா தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

மத்திய சென்னை  தொகுதியில் திமுக  வேட்பாளர் தயாநிதிமாறன் 1,053 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். பாமக   வேட்பாளர் சாம் பால் 167 வாக்குகளும் பெற்று உள்ளார்.  இதனையடுத்து திமுக கட்சியினர் முன்னணி  நிலவரத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.