மாமியார் கேட்ட ஆபாச அறுவெறுப்ப கேள்வி! வெந்நீரை கொதிக்க கொதிக்க ஊற்றி இரும்பு ராடால் ஓங்கி ஒரே அடி! நள்ளிரவில் மருமகள் அரங்கேற்றிய பயங்கரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாமியார் எந்நேரமும் கெட்ட வார்த்தைகளால் திட்டியதால் கடுப்பான மருமகள் மாமியாரை தீர்த்து கட்டிவிட்டார்.


சித்தாலபாக்கம் பகுதியை சேர்ந்த முனியம்மாள் கல்குவாரியில் வேலை செய்யும் தனது மகன் வெங்கடேசனுக்கும் ஜோதி என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தார். கணவரை இழந்த முனியம்மாள் 2 பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டு மகன் வீட்டிலேயே வசித்து வந்தார். 

ஆரம்பத்தில் மாமியார் மெச்சும் மருமகளாக இருந்து வந்த ஜோதி நாளடைவில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காவல்நிலையம் வரை அழைத்து சென்றுவிட்டது. ஒவ்வொரு முறை மாமியார் போலீஸ் ஸ்டேஷன் செல்வதும், மருமகள் சென்று விளக்கம் தருவதும் பின்னர் போலீஸ் வழக்கு எதுவும் பதியாமல் சமரசம் செய்து அனுப்பி வைப்பதுமாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்னர் முனியம்மாளுக்கும், ஜோதிக்கும் சண்டை வந்துள்ளது. மகள் உடைத்தால் மண் பானை, மருமகள் உடைத்தால் பொன் பானை என்பதற்கேற்பட மாட்டை ஒழுங்காக கட்டவில்லை என வம்பிழுத்துள்ளார் முனியம்மாள். மேலும் ஜோதியை மிகவும் கெட்ட வார்த்தைகளால் அதாவது ஒத்த வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் டென்ஷன் ஆன ஜோதி நள்ளிரவில் 100 டிகிரி பாரன்ஹீட் உள்ள கொதிநீரை தூங்கிக் கொண்டிருந்த மாமியார் மீது ஊற்றியுள்ளார். சுடுநீரின் வெப்பத்தை தாங்க முடியாமல் முனியம்மாள் அலறித் துடித்தார். இதனால் பயந்து போன ஜோதி அருகில் இருந்த இரும்புக் கம்பியால் மாமியாரின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் சம்பவ இடத்திலேயே மாமியார் இறைவனடி சேர்ந்தார். இதையடுத்து வாலாஜாபாத்தில் தன் அம்மா வீட்டிற்கு தப்பி சென்ற ஜோதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஜோதியின் கணவர் கடவுள் புண்ணியத்தில் நம்மை எதுவும் செய்யவிலலை என மனதுக்குள் பேசியது நமக்கும் கேட்டது.