உடை மாற்றிக் கொண்டிருந்த மருமகள்! உள்ளே நுழைந்த மாமனார்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மாமனாரையும், மாமனாரை காப்பாற்ற வந்த மாமியாரையும் அடித்து கொலை செய்த மருமகள் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், ஜமகண்டி தாலுகா ஜம்பகிகேடி கிராமத்தில் சித்தராய மல்லேஷ்வரா, மனைவி கலாவதி வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மகனுக்கு திருமணம் ஆன பின்பு மருமகள் கீதாவும் இவர்களுடன் வசித்து வந்தார். திருமணம ஆன முதலே கீதாவுக்கு அவருடைய மாமனார் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் தன்னுடைய அறையில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது அவரது மாமனார் திடீரென அங்கு வந்தார். அப்போது கீதாவை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் அவரது மாமனார் மல்லேஸ்வரா இதனால் மனதளவிலும், உடலாலும் பாதிக்கப்பட்ட கீதா இது குறித்து கணவரிடம் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.

மேலும் இது குறித்து மருமகள் மகனிடம் சொல்லாதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் மாமனார். மகன் வீட்டில் இல்லாத போதெல்லாம் தனது இச்சையை எப்படியாவது தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கீதாவை கண்ட இடத்தில் தொட்டும், பலவந்தமாக கட்டிப்பிடிப்பதுமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை யாரும் இல்லாத நேரத்தில் கீதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது கீதா ஆத்திரம் அடைந்து உள்ளார்.உடனடியாக வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாமனாரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த மாமனார் சித்தராயா அலறி துடித்தபடி கீழே விழுந்தார்.  

கணவனின் அலறல் சத்தம் கேட்ட மாமியார் கலாவதி அவரை காப்பாற்ற முயன்றார். இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த கீதா, மாமியாரையும் இரும்பு கம்பியால் தாக்கினார். இந்த சம்பத்தில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரை விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தகவல் அறிந்த போலீசார் 2 பேரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கீதாவையும் கைது செய்தனர்.

மாமனாரின் தொடர் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை, சில நேரங்களில் வீட்டில் யாரும் இல்லை என்றால் என்னை கட்டிப்பிடித்துவிடுவார். நாளுக்கு நாள் அவரின் தொல்லை தாங்கமுடியாததால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாகவும், தடுக்க வந்த மாமியாரையும் தீர்த்துக்கட்டியதாகவும் கீதா தெரிவித்தார்.