அம்மா அடையாளம் காட்டிய நபர்தான் ஒற்றைத் தலைவராக அ.தி.மு.க.வில் இருக்க வேண்டும் என்று ராஜன் செல்லப்பா பேசியதைப் பார்த்ததும், அவர் பன்னீருக்கு ஆதரவாக எப்படி குரல் எழுப்புகிறார் என்று பலரும் யோசித்தார்கள்.
பன்னீர் பதவிக்கு ஆபத்து! செல்லப்பா, ராஜேந்திரனை வைத்து எடப்பாடி ஆடும் கேம்!
இப்போதுதான், அது எடப்பாடியின் பாலிடிக்ஸ் கேம் என்று தெரியவந்துள்ளது. ராஜன் செல்லப்பா பேசியதையடுத்து குன்னம் ராஜேந்திரன் இன்று ஒரு செல்ஃபி வீடியோ வெளியிட்டார். அதில், ‘’அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கூறிய கருத்தை ஆமோதிக்கிறேன்.
ஆனால், அந்தத் தலைமை வலிமையான, சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களது குடும்பத்தை ஒதுக்கிவைத்து விட்டு கழகமே குடும்பம் வாழ்ந்து மறைந்தார்கள்.
ஆனால், தனது குடும்பத்திற்காக கழகத்தை வளைக்க நினைப்பது எங்களுக்கு வேதனையளிக்கிறது” என்று கூறியிருந்தார். அவர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தைத்தான் கூறுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்துபோனது. மேலும், இவர் மத்திய அமைச்சர் பதவி கேட்டு ஒற்றைக்காலில் நின்ற வைத்தியலிங்கத்தின் ஆதரவாளர் என்பதாலே, அத்தனை குட்டும் வெளிப்பட்டது.
தன்னுடைய மகனுக்குக் கிடைக்கவேண்டிய பதவியை இ.பி.எஸ். கெடுத்துவிட்டார் என்பதை நன்கு உணர்ந்துகொண்டார் பன்னீர். அதனால் இப்போது ஆட்சியைவிட கட்சி முக்கியம் என்பதால், துணை முதல்வர் பதவியைக் கொடுத்து கட்சியைக் கைப்பற்ற திட்டம் போட்டார்.