பொள்ளாச்சி காமுகர்களை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு அவதூறு! தி.க.,வீரமணிக்கு எதிராக வாள் சுழற்றும் யாதவர்கள்!

கிருஷ்ண பரமாத்மா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திராவிடர்கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்யவேண்டும் திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் யாதவர் சங்கம் சார்பில் புகார் தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து யாதவ நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்


ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கி.வீரமணியை கைது செய்யக்கோரி புகார்மனு தரப்பட்டது. அதில்  சமீபத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைப்பற்றி கூட்டம் ஒன்றில் பேசியுள்ள கி.வீரமணி இதற்கு காரணமே கிருஷ்ணர்தான்

இவர்தான் முதல் குற்றவாளி எனவும் கீழ்த்தரமாக சிறுமை படுத்தி பேசியுள்ளார் இதை வன்மையாக நாங்கள் கண்டிப்பதுடன் திராவிடர் கழகத்தையும் தடை செய்யக்கோருகி றோம் என குறிப்பிடப்பட் டுள்ளது.

புகார்மனுவில் யாதவ சங்கத்தை சேர்ந்த  பாரதராஜா யாதவ், ராதாகிருஷ்ணன் யாதவ்,  உட்பட பலர் கையொப்ப மிட்டுள்ளனர்.