மனைவிக்கு பலருடன் தகாத உறவு! கண்டுபிடித்த கணவன்! மகனுக்கு தேனில் விஷம்! பிறகு நடந்த விபரீதம்!

கோவையில் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அப்பெண்ணின் கணவர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை சிவானந்தா புரத்தில் வசித்து வருபவர் அர்ஜுன் மற்றும் இவரது மனைவி அலமேலு இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு யூகாஷ் 14, என்ற மகனும் உள்ளார் அவர் அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார்.இந்நிலையில் அலமேலு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் இன்னொருவருக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் செல்போனில் பல ஆண்களுடன் அலமேலு தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். இதை அறிந்த அலமேலுவின் கணவர் பலமுறை எச்சரித்தும் அலமேலு ஆண்களுடன் உண்டான தகாத தொடர்பை நிறுத்திக் கொள்வதாக தெரியவில்லை இதனால் மனமுடைந்த அர்ஜுன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் தனது மகன் யுகாஸ்க்கு தேனில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தன் மகன் இறந்த பிறகு, அர்ஜுன் அங்கிருந்த பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய அலமேலு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்பட்ட நிலையில் உடனே அருகில் உள்ளவர்களும் தகவல் தெரிவித்துள்ளார், இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அனைவரும் வந்து கதவைத் தட்டி பார்த்துள்ளனர். கதவு திறக்கப்பட்ட நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது தனது மகன் இறந்த நிலையிலும் தன் கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.