தொழிலை மேம்படுத்த வாங்கிய கடனை அடைக்க முடியாத அழகுக் கலை பெண் நிபுணர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கணவனுக்கு தெரியாமல் பெண் அழகுக் கலை நிபுணர் செய்த செயல்..! கண்டுபிடித்த பிறகு எடுத்த விபரீத முடிவு! கோவை பரபரப்பு!

கோவை குனியமுத்தூர் அடுத்த ராஜன் நாயக்கர் தோட்டத்தில் தேவராஜன், தீபா தம்பதி வசித்து வருகின்றனர். அழகுகலை நிபுணரான தீபா அப்பகுயில் ஒரு அழகுக் கலை நிலையம் (பியுட்டி பார்லர்) நடத்தி வந்துள்ளார். அந்த தொழிலை மேம்படுத்த சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் பியுட்டி பார்லருக்கு வாடிக்கையாளர்கள் யாரும் அதிகம் வராததால் வாங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை தீபாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொடுத்த கடனை கேட்டு பலர் தீபாவை நிர்பந்தம் செய்துள்ளனர். இதனால் தீபா மற்றும் அவரது கணவர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் இந்த பிரச்சனையில் கணவர் கடுமையான வார்த்தைகளில் பேச மனமுடைந்த தீபா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குனியமுத்தூர் தற்கொலை செய்து கொண்ட தீபாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தீபாவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் மற்றும் கடன் கொடுத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அழகுக் கலை நிபுணர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குனியமுத்துர் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.