இன்று உடல் உறுப்பு தான தினம் கொண்டாடப்படுவதையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் அறிக்கை..! உடல் உறுப்பு தானத்தில் ஐந்தாவது ஆண்டாக தமிழகம் முதல் இடம்..!

அதில், உடல்உறுப்புதானம் குறித்து மக்களிடம் நிலவிவரும் அறியாமையை அகற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்புதானம் செய்திட ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் திங்கள் 13-ஆம் நாள் சர்வதேச உடல்உறுப்புதான தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில், உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைஆணையம் என்ற முன்னோடி அமைப்பை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கினார்கள். அதன் பயனாக, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது தமிழ்நாட்டில் இதுவரை 1382 கொடையாளர்களிடமிருந்து 8163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.
உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தமிழ்நாடு முதலிடம் வகித்து, மத்தியஅரசின் விருதுகளை பெற்றுள்ளது.
ஏழைஎளியமக்கள், அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல்உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள, அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய்வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.மாண்புமிகுஅம்மாவின் அரசு, உடல்உறுப்புதானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றது.
கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற உடல்உறுப்புதான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 12,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டது ஆசியசாதனைபுத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
உடல்உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டநோயாளிகளின் நலனை கண்காணித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைகளிலிருந்து அதற்கான விவரங்களை குறிப்பிட்டகால இடைவெளியில் (3 மாதங்கள், 6 மாதங்கள், 1 ஆண்டு) பெற்று, ஆய்வு செய்ய 10 ஆண்டுகளுக்கான தரவுகளை தேசியஅளவில் சேகரித்த முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்துவருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மூளைத் தண்டுச் சாவுஅடைந்தவரின் உறுப்புகளைத் தானம் அளிப்பதின் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்கமுடியும். எனவே, உடல்உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல்உறுப்புதானம் செய்திட முன்வரவேண்டும் என்றுகேட்டுக்கொண்டுள்ளார்.