கல்வித் தொலைக்காட்சி இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.! தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது!

மனிதகுலம் இதுவரை சந்தித்திராதகோவிட்-19 என்னும் கொடும் தொற்று நோய் உலகத்தையே முடக்கிப் போட்டதன் காரணமாக, புதியகல்வி ஆண்டை துவங்குவது என்பது மிகப் பெரும் சவாலாக இருந்தபோதிலும், இந்தச் சவாலை எதிர்கொண்டு, இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில், மாணவர்கள் தங்கள் கற்றலை தங்கள் இல்லங்களிலிருந்தே தங்குதடையின்றி பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சி மாற்றி அமைக்கப்பட்டு,
பள்ளிகளுக்கான பாடஅட்டவணை போன்று கல்வித் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்புஅட்டவணை, வகுப்புவாரியாக, பாடவாரியாக, வாரநாட்களுக்குதயாரிக்கப்பட்டுஇரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் வீடியோபாடப்பதிவுகள் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இப்புதிய வடிவில் தயாரிக்கப்பட்ட பாடங்களை கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியை நான் 14.7.2020 அன்றுதொடங்கி வைத்தேன்.தமிழ்நாடு அரசின் இந்தமுயற்சிகளுக்கு உறுதுணையாக 11 தனியார் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளிலும், ஏர்டெல் மூலமும் கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள்ஒளிபரப்பப்படுகின்றன.
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முதல் நாள் பார்க்கத் தவறியவர்கள், மறுநாள் முதல் கல்வித் தொலைக்காட்சியின் யூடியூப் வழியாக பாடங்கள், படித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அட்டவணை மற்றும் இதரதகவல்கள் கல்வித் தொலைக்காட்சியின் இணையதளத்திலும் கிடைக்கிறது. 1 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புபள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பமாகும்.
பனிரெண்டாம் வகுப்பு பாடங்களை பொறுத்தவரை, அவர்களுக்கான பாடங்கள் தமிழ்நாடு அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினிகளில் 2939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள ஹைடெக் ஆய்வகங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்துவழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி வேலைநாட்களில் பாடங்கள் நடத்தப்படுவதைப் போன்றுஒளிபரப்பு அட்டவணை தயாரிக்கப்பட்டு, பாடவாரியாக தலைப்புவாரியாக பாடம் நடத்துவதும், 10-ம்வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகைமொழியில் பாடம் ஒளிபரப்புவதும் கல்வித் தொலைக்காட்சியின் தனிச் சிறப்பாகும்.
`கல்வித் தொலைக்காட்சி' இன்றுடன் முதலாம் ஆண்டினை பூர்த்தி செய்கிறது என்றசெய்தியும், இந்தத் தொலைக்காட்சி இந்தியாவில் உள்ளமற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்ற செய்தியும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியினை அளிக்கிறது. ஓராண்டுநிறைவுசெய்தகல்வித் தொலைக்காட்சிக்குஎனதுமனமார்ந்த வாழ்த்தினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.