40 வயது மாமியை மடக்கிய 24 வயது இளைஞன்! விரட்டி விரட்டி வெட்டிய கணவன்! அதிர வைக்கும் காரணம்!

சென்னை மயிலாப்பூரில் வாலிபர் ஒருவர் நடு ரோட்டில் ஒட விரட்டி விரட்டி மர்ம கும்பல் வெட்டிய சம்பவம் காண்போரை அதிர்ச்சி யில் உறைய செய்வதாக இருந்தது.


சென்னை, மயிலாப்பூர் பல்லக்குமாநகரைச் சேர்தவர் தினேஷ்குமார் இவர் எதர்ச்சியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த ஆட்டோவில் இருந்து சில மர்ம நபர்கள் கூர்மையான அரிவாளைக்கொண்டு தினேஷை  தாக்க முயற்சி செய்தனர்.

சுதாரித்து கொண்டு ஓடத் துவங்கிய தினேஷை அந்த மர்ம நபர்கள் விடாமல் துரத்தி சென்று விரட்டி சரமாரியாக தாக்க நேரில் பார்த்த பொது மக்கள் செய்வது அறியாமல் திகைத்து போனார்கள்.

இது குறித்த  தகவல் அறிந்து வந்த போலீசார் இரத்த வெள்ளத்தில்க் கிடந்த தினேஷ்குமாரை மீட்டு அருகில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப, மிக மோசமான உடல் நிலையில் இருந்த தினேஷ் அங்கிருந்து உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே சம்பவம் குறித்து விசாரிக்க துவங்கிய போலீசார் அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதில்  மயிலாப்பூரைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் நாகமணி என்ற இருவரை அடையாளம் கண்டுப்பிடித்து அவர்களை  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணையில் மயிலாப்பூரை சேர்ந்த 40 வயது பெண்மணி ஒருவருடன் தினேசுக்கு தகாத உறவு இருந்துள்ளது. இதனை கண்டுபிடித்த அந்த பெண்மணியின் கணவன் தினேசை ஆட்களை ஏவி விரட்டி விரட்டி வெட்டியுள்ளார். தற்போது அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.