காதல் திருமணம் ஆன மூன்றே மாதத்தில் மனைவிக்கு தகாத உறவு! கண்டுபிடித்த கணவன் செய்த கொடூரம்!

சென்னை கே.கே. நகர் பகுதியில் திருமணம் செய்த 3 மாதங்களில் தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில் தன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


காதலித்து திருமணம் செய்து மூன்று மாதங்கள் முடிவதற்குள் மணவாழ்க்கை கசந்து கணவன் மனைவியைக் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர்அருள் குமார் 24, மற்றும் சந்தியா 20, என்பவரும் காதலித்து வந்த நிலையில் தங்கள்  பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவருக்கும் திருமணம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அதே பகுதியில் அருள்குமார் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வருகிறார்.

திருமணத்திற்குப் பின் அருள்குமார் தனது மாமனார் வீட்டில் ஒன்றாக மனைவி சந்தியாவுடன் வசித்து வந்துள்ளார். சந்தியாவுக்கு அருகே உள்ள பேன்சி ஸ்டோர் உரிமையாளுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருடன் அடிக்கடி சந்தியா பேசி வந்துள்ளார்.

இதனால் தனது காதல் மனைவியின் நடத்தையின்  மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார் அருள்குமார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி  வாக்குவாதங்கள் ஏற்பட்டதால் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும்  வழக்கம்போல் சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது ஆத்திரத்தில் அருள்குமார் சந்தியாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். அதனைப் பார்த்து பதற்றமடைந்தார் அருள் குமாரின் மாமியார் சரிதா மாமியார்  அவர்களைச் சமாதானப்படுத்தியுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் நிதானமிழந்த அருள்குமார் அருகிலிருந்த   கத்தியால் சந்தியாவைக் குத்தப்பாய்ந்தார்.விபரீதத்தை உணர்ந்த மாமியார் சரிதா மருமகனைத் தடுக்கப் பார்க்க அவருக்குக் காயம் ஏற்பட்டது. அதையடுத்து சரிதாவை கீழே தள்ளிவிட்டு சந்தியாவை தாக்கியுள்ளார் அருள்குமார்.

சந்தியாவின் தொண்டையில் கத்தி பாய்ந்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சந்தியா இறந்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே இச்சம்பவம் பற்றி போலீசாருக்கு தெரிவித்துள்ளனர் இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அருள் குமாரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் சந்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து அருள் குமாரிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.