சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகள் குறித்து மத்திய மனிதவள அமைச்சகமும் காவல்துறையும் உடனடி விசாரணை நடத்திடுக இந்திய மாணவர் சங்கம் அறிக்கை.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபா தற்கொலை! 3 பேராசிரியர்களின் துன்புறுத்தலே காரணம்! செல்போனில் சிக்கிய ஆதாரம்!
சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடியில் மாணவர் தற்கொலைகள் தொடர்ந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஐந்துபேர் வரை தற்கொலை செய்து மரணமடைந்துள்ளனர். இதில் ஒரு பேராசிரியரின் தற்கொலையும் அடங்கும். ஆனால் இது குறித்து எந்தவொரு முறையான விசாரணையோ, நடவடிக்கைகளோ இதுவரை எடுக்கவில்லை.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பாத்திமா லத்தீப் என்ற சமூகவியல் துறை பயிலும் முதுகலை மாணவி திடீரென தற்கொலை செய்து இறந்து போனார். சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய காவலர்கள் சென்று விசாரணை நடத்திதி மன அழுத்ததால் மாணவி தற்கொலை செய்துள்ளதாக விசாரணையை முடித்துள்ளனர்.
ஆனால் இறந்த மாணவியின் குடும்பதார்கள் மாணவி பாத்திமா லத்திப் இணைதளங்களை ஆய்வு செய்த போது அதில் நோட் (குறிப்பேடு) எனும் செயலியில் அந்த மாணவி தற்கொலைக்கு காரணமாக இரண்டு குறிப்புகளை எழுதியுள்ளார். அதில் முதல் குறிப்பில் ஒரு பேராசிரியரின் பெயரையும், இரண்டாவது குறிப்பில் இரண்டு பேராசியர்களின் பெயரையும் தற்கொலைக்கு காரணமாக எழுதியுள்ளார்.
இறந்த மாணவியின் கைபேசி உள்ளிட்டு இன்னும் பிற உபகரணங்கள் காவல்துறையினர் வசம் உள்ளபோது அதை அவர்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை என தெரிய வருகிறது. எனவே தமிழக காவல்துறை இது குறித்து உறுதியான விசாரணை நடத்திட உத்திரவிட வேண்டும்.
அதேபோல் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இது குறித்து உயர்மட்ட விசாரணை குழு அமைத்து தொடர் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஐடி நிர்வாகமும் பிரச்சினைகளை மூடி மறைக்காமல் மாணவர்களோடு இணைந்து மனநல ஆலோசனை உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் இறந்த மாணவிக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்
ஏ.டி.கண்ணன் மாநிலத்தலைவர்
வீ.மாரியப்பன் மாநிலச்செயலாளர்