கல்யாணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஓட்டலில் ஒரே அறையில் தங்கலாம்! உயர்நீதிமன்றம் அனுமதி!காதலர்கள் கொண்டாட்டம்!

திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்


திருமணமாகாத ஆணும் பெண்ணும், ஹோட்டலில்ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

கோயம்புத்தூரில் ஒரு தனியார் ஹோட்டல்ஒன்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. இந்த தனியார் ஹோட்டலில்ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாலும், மற்றொரு அறையில் மதுபான பாட்டீல்கள் இருந்ததாலும் இந்த ஹோட்டல் போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினரால்மூடப்பட்டது. இதனை எதிர்த்து அந்த ஹோட்டல்உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “பத்திரிகைகளில் வெளியான செய்திகளை வைத்து இந்த ஹோட்டல் மூடப்பட்டுள்ளது. அதாவது இந்த ஹோட்டலில்திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்குவதால் மூடப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில்ஒரே அறையில் தங்குவதால் என்ன தவறு இருக்கிறது. திருமணமாகாத ஆண் பெண் ஒரே அறையில் தங்கக் கூடாது என்ற சட்டம் ஒன்றும் இல்லை. 

அதேபோல திருமணமாகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வது எந்தவித குற்றமும் இல்லை. அப்படி இருக்கும்போது ஆணும் பெண்ணும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்கினால் எவ்வாறு குற்றமாகும். அத்துடன் இந்த விடுதியின் அறையில் மதுபாட்டீல்கள் கிடைத்ததால் மட்டும் இவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. 

மேலும் இந்த விடுதியை மூடும்போது உரிய நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. ஆகவே சீல் இடப்பட்ட இந்த விடுதியை ஆணை கிடைத்த 2 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கவேண்டும்” என உத்தரவிட்டார்