சென்னையிலுள்ள தேவாலயத்தில் பாதிரியார் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை தேவாலயத்திற்குள் இளம் பாதிரியாரின் சடலம்..! தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ந்த உடன் தங்கியிருந்தோர்..! அதிர்ச்சி காரணம்!

சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வருபவர் மாட்டின். 37 வயதான இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டே பாதிரியாராக பணிபுரிந்து வயதான இவர் சென்னை பல்கலைக்கழகத்தைவந்தார்.
தேவாலயத்தில் உள்ள அறையில் தங்கியிருந்த இவர், நேற்று காலை வழக்கமாக நடைபெறும் தேவாலயப் பூஜையில் பங்கேற்க்கவில்லை. இதனால் மற்ற பாதிரியார்கள் மார்ட்டின் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் மார்ட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதற்கிடையே, உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திடீரென்று தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக ஏதோ ஒரு மார்ட்டின் இருந்து வந்ததாகவும், மற்ற பாதிரியார்களிடன் சகஜமாக பேசவில்லை என்றும் தெரியவந்தது. பல்கலைக்கழகத்தில் இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.