தலைய என்னடா செஞ்சி வச்சிருக்க! தாய் கேட்ட ஒரே ஒரு கேள்வி! வீட்டில் சடலமாக தொங்கிய மகன்! சென்னை அதிர்ச்சி!

சென்னை அருகே பொங்கல் விடுமுறைக்கு வந்த மகனின் புள்ளீங்கோ ஹேர் ஸ்டைலை வெட்ட சொன்ன தாயுடன் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவன் மனமுறிந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அருகே உள்ள வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகனா என்பவருடைய மகன் சீனிவாசன. இவர் குன்றத்தூரில் தங்கி அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த சீனிவாசன் முழுமையாக முடியை வெட்டாமல் புள்ளீங்கோ ஹேர் ஸ்டைலாக வெட்டி வந்துள்ளார். 

பிள்ளை பார்த்த தாய் மோகனா, இப்படியா முடி வெட்டுவது? படிக்கும் எல்லாம் வெட்டினால் படிப்பு எப்படி மண்டையில் ஏறும்” என சரமாறியாக மகனை சாடியுள்ளார். தனது தாய் இப்படி திட்டியதால் மனமுறிந்த சீனிவாசன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையடுத்து வேலை முடிந்து இரவு வீடு திரும்பிய மோகனா மகன் தூக்கில் சடலமாகத் தொங்குவதைப் பார்த்து உறைந்துபோய் நின்றுள்ளார். அங்கு அழுது கதறிய பின்னர் அக்கம், பக்கம் வீட்டினர் வந்து அறுதல் கூறி காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிச்சோதனைக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை அது சட்டபடி குற்றமாகும். தற்கொலையை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கொண்டு வந்துள்ளது. அதற்காக பல ஆலோசனை மையங்களை நடத்தியும் வருகின்றது.  

 தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.