வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வீட்டிற்கு வந்து செல்லும் கணவன்! காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு! தவிக்கும் குழந்தை!

சென்னையில் வரதட்சனை கொடுமையால் இளம் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.


திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியை சேர்ந்தவர் துரை மற்றும் சாவித்திரி. இவர்களின் மூத்த மகள் தான் சரண்யா என்கிற கார்த்திகா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு விமல் ராஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெறுவதற்கு முன்பே விமல் ராஜின் பெற்றோர் வரதட்சணையாக 80 சவரன் நகை மற்றும் கார் கேட்டுள்ளனர். 

ஆனால் கார்திகாவின் பெற்றோர் 55 சவரன் நகை ஒரு கிலோ வெள்ளி மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். அதன் பிறகு திருமணம் நடந்து முடிந்த பிறகு அடிக்கடி கார் வாங்கி தருமாறு தொந்தரவு செய்துள்ளனர். கார்த்திகாவின் மாமியார் நாங்கள் 80 சவரன் நகை கேட்டோம்  ஆனால் உன்னுடைய பெற்றோர் 50 சவரன் நகை போட்டு உள்ளார் என்று குறை கூறிய வந்துள்ளனர். 

இதனிடையே கார்த்திகாவின் கணவர் சேலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவர் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே சென்னை வந்து செல்வார். இந்நிலையில் கார்த்திகா தற்கொலை செய்து கொண்டதாக கார்த்திகாவின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக அவர்கள் சென்னை வந்து பார்த்தபோது கார்த்திகாவின் உடலை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டிருந்தது.  மேலும் இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணையில் உள்ளதால் காவல்துறையினர் புகார்களை வாங்கவில்லை. 

அதன் பொறகு காவல்துறையினர் தரப்பில் கார்த்திகா நாற்காலியில் அமர்ந்தபடியே இறந்ததாக தெரிவித்ததால்  கார்த்திகாவின் உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்து பிரேதத்தை வாங்கவில்லை.  இந்த இறப்பிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.