அன்புமணி கேள்விக்கு மத்திய அமைச்சர் அதிரடி..! கல்விக்கொள்கை பராக்

நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ள மைய அரசின் புதிய கல்விக்கொள்கையை ரத்துசெய்வது எனும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


மாநிலங்களவையில் பா.ம.க. உறுப்பினர் அன்புமணி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் இவ்வாறு கூறினார். மத்திய அரசு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், அக்கொள்கையை ஏற்க மறுத்து இருப்பதாலும் புதியக் கல்விக் கொள்கையை திரும்பப்பெறும் திட்டம் மத்திய அரசுக்கு உண்டா என்று மாநிலங்களவையில் அன்புமணி கேள்வி எழுப்பினார்.

பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், ” புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். ‘‘வரைவு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துரைகளும் யோசனைகளும் வந்துள்ளன. புதிய கல்விக் கொள்கைக்கு நல்ல விளம்பரம் கிடைத்திருப்பதுடன், அனைத்து தரப்பினரிடமிருந்தும் சாதகமான கருத்துகள் கிடைத்துள்ளன.

அவற்றின் அடிப்படையில் 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையை இறுதிசெய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது” என்றும் அமைச்சர் பொக்கிரியால் கூறினார்.