புடவை கட்டிக் கொண்டு பிரேக் டான்ஸ்! இளம் தாய் மகனுக்காக செய்த செயல்! செம வைரல் வீடியோ!

சென்னை: புடவையை வரிந்து கட்டிக்கொண்டு குழந்தையுடன் பிரேக் டான்ஸ் ஆடும் தாய் ஒருவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறிப்பிட்ட வீடியோவில், முதலில் ஒரு குழந்தை ஆடுகிறது. இந்தி பாடலுக்கு  நடனமாடும் அக்குழந்தையால் ஒரு கட்டத்தில் ஈடுகொடுக்க முடியாமல் போகவே, திடீரென குழந்தையின் தாய் துள்ளி எழுந்து, பிரேக் டான்ஸ் ஆட தொடங்குகிறார்.

தொழில்முறை நடன கலைஞர்களைப் போல அந்த பெண் இஷ்டத்திற்கு, வெகு இயல்பாக, தனது கை கால்களை வளைத்து, பிரேக் டான்ஸ் ஸ்டெப் போட அதனை வீட்டில் இருப்பவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

புடவையை வரிந்து கட்டிக் கொண்டு அந்த பெண் டான்ஸ் ஆடும் வீடியோ தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. எனினும், இது எங்கே, எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்ற விவரம் தெரியவில்லை.