இறந்த குழந்தையை புதைக்க தோண்டப்பட்ட குழி! உள்ளே மண் பானையில் உயிருடன் இருந்த மற்றொரு குழந்தை! பதற வைக்கும் சம்பவம்!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் இறந்த குழந்தையை அடக்கம் செய்வதற்காக பள்ளம் தோண்டியபோது மண்பானையில் குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்டிருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


உத்தர பிரதேச மாநிலத்தில் ஹித்தேஷ் குமார் என்பவரின் மனைவிக்கு குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை சற்று நேரத்திலேயே உயிரிழந்துவிட்டது. இதையடுத்து இறுதிச் சடங்கு செய்யப்பட்டு குழந்தையின் உடலை புதைக்க மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு பள்ளம் தோண்டியதுபோது ஒரு பானை தட்டுப்பட்டது.

அது என்னவென்று ஹித்தேஷ் பார்க்க, அதில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த்து. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சுமார் 3 அடி ஆழத்தில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்தவர்கள் யார் என்பது குறித்தும், குழந்தையின் பெற்றோர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் மீட்கப்பட்ட பெண் குழந்தை தற்போது நலமுடன் இருக்கிறது. ஹித்தேஷ் என்பவரின் குழந்தையை அடக்கம் செய்ய அங்கு பள்ளம் தோண்டாமல் வேறு எங்காவது தோண்டி இருந்தால் அந்த பச்சிளம் பெண் குழந்தை துடிதுடித்து உயிரிழந்திருக்கும்.

குழந்தையை உயிருடன் புதைத்தது யார், அந்த குழந்தையின் பெற்றோர் எங்கு சென்றனர் மேலும் எப்போது புதைக்கப்பட்டது, புதைக்கப்பட்ட குழந்தை உயிருடன் இருபபது எப்படி, காதல் விவகாரத்தில் பிறந்த குழந்தையை வளர்க்க மனமில்லாமல் புதைத்து விட்டு சென்றனரா என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.