ஆரம்பத்தில் இருந்தே சாக்ஷிக்கும் கவினுக்குன் இடையிலான அந்த உரசல் அனைவரும் அறிந்தது தான் என்றாலும் கூட அவர்கள் பிரச்சனை கமல் வரை சென்றதும் குறிப்பிடத்தக்கது.
சாவடிச்சிடுவன் டி ! ஆக்ரோஷமான காதல் ! நடுங்கி போன சாக்ஷி

இந்த நிலையில் கவின் சாக்ஷியை மனதளவில் விரும்புவதாக அவருக்கு நம்பிக்கை கொடுத்து விட்டு மற்றொரு பக்கம் லாஸ்லியாவுடன் விளையாடுவதையும் நிறுத்த வில்லை.
இதற்கிடையில் அவர்களுக்கு சில மோசமான நிகழ்வுகள் இருந்தாலும் கூட அவர்கள் மீண்டுமாக ஒன்று சேர்ந்துள்ளனர், மும்முனை போட்டியாக மாறக்கூடிய சூழல் இருந்து என கூறலாம்.
இந்த நிலையில் நேற்று சிறப்பாக டாஸ்க் செய்யாதவர்கள் என்ற பட்டியலில் ஆரம்பம் முதலே லாஸ்லியா தான் சிறைக்கு செல்ல சேண்டும் என கவினுடன் பேச, அவர் மறுத்து வருகிறார்.
இதற்கு இடையில் லாஸ்லியா தாமாக சிறப்பாக செயல்படாதவராக முன் வந்து அறிவித்து கொள்ள மற்றவர்களும் அதை ஒத்துக் கொள்கிறார்கள், கடுப்பான கவின்,
செய்வதறியாது சாக்ஷியை கோர்த்து விட பிரச்சனை சூடுபிடிக்கிறது, இதன் உட்சகட்டமாக கவின் சாவடிச்சுவேண்டி, நான் சொல்றத கேளுன்னு கத்த, சாக்ஷி நடுங்கி போகும் காட்சிகள் வைரலாகி வருகிறது.