அழகும் சுவையும் நிறைந்து பாஸ்மதி அரிசி உடம்புக்கு இவ்வளவு கெடுதல் தருகிறதா?

மக்களிடையே மற்ற அரிசிகளை விட, பாஸ்மதி அரிசியின் மீது மோகம் அதிகமானதற்கு என்ன காரணம்?


மற்ற அரிசிகளை போலத்தான், அரிசி நீளமாக வரவேண்டும் என்பதற்காக இந்த அரிசியைப் பட்டைத் தீட்டும் இயந்திரத்தில் போட்டு அதிக நேரம் தீட்டுவார்கள். இதனால் அரிசியில் உள்ள பெரும்பாலான சத்துகள் வெளியே போய்விடுகின்றன. சாதம் குழையாமல் இருக்க அரை வேக்காட்டில் எடுத்துவிடுவார்கள். இதைச் சாப்பிடும்போது, தொண்டையில் அடைத்துக் கொள்ளலாம். வயிறு நிறையாது. சாப்பிட்ட திருப்தியும் இருக்காது. இதை குழந்தைகள், பெரியவர்கள் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

குழந்தைகள் விரும்பிக் கேட்டாலும், அரிசியை குழைய வடித்துக் கொடுப்பதே ரொம்ப நல்லது! அதுவும் முடிந்த வரை எப்போதாவது குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.என்னதான் இந்த அரிசியில் சமைப்பது சுலபம் என்றாலும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த கைகுத்தல் அரிசி, சிவப்பு குண்டு அரிசி போன்றவற்றுக்கு ஈடாகாது.''

ஐ.ஆர்- 20, 30, பொன்னி, சம்பா, குருணை என பலவகையான அரிசி வகைகளை வடித்து சாப்பிட்ட நம் தமிழ் இனம். இன்று பாஸ்மதி அரிசியின் பின் தான் படையெடுக்கிறது. ஏன், திருமணங்களில்கூட, பாஸ்மதி அரிசியையே பயன்படுத்துகின்றனர். அரிசியின் நீளத்தில்தான் குடும்பத்தின் கௌரவம் உள்ளது என்று மிகவும் நீளமான அரிசியை விரும்புகிறார்கள். அதற்கு அதிக விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளனர். இதன் விலை கிலோ 70 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அரிசியின் நீளத்தைப் பொருத்து விலை மாறுகிறது.பொதுவாக, பாஸ்மதி அரிசியை எல்லோரும் விரும்ப காரணம் அதன் நீளம், அழகான வடிவம். மற்ற அரிசியை விட இது வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். பாஸ்மதி அரிசியை சமைப்பதும் மிகவும் எளிது. இந்த அரிசியில் பிரியாணி, ஃப்ரைடுரைஸ் போன்ற உணவுகள் செய்யும்போது, பார்த்ததுமே சாப்பிடத் தூண்டுற மாதிரி அழகா இருக்கும். அதனால்தான் குழந்தைகள் ரொம்பவே விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இன்றைக்கு வீடு வரை இந்த அரிசி வந்ததற்கு காரணம் இதுதான்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அதிகமாக விரும்புவதால் என்னவோ, பாஸ்ட்புட் கடைகள் முதல் பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை தயாரிக்கப்படும் உணவுகளில் பாஸ்மதி அரிசியை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.பாஸ்மதி அரிசி மற்ற அரிசி வகைகளை போன்று அல்லாமல், அரிசியின் நீளம் அதிகமாகவும், மிகுந்த சுவையாகவும் இருப்பதால், இதை உயர் வகுப்பினர் முதல் சாதாரண மக்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.