மரண காட்டு காட்டிய மேக்ஸ்வெல்: T20 தொடரை இழந்த இந்தியா!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.


இந்திய அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கடைசி போட்டியில் சரியாக விளையாடாத ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தவான் சேர்க்கப்பட்டு இருந்தார்.

கடைசி போட்டியில் கடைசி ஓவரை சரியாக வீசாமல் இந்திய அணியின் தோல்விக்கு காரணமான உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டார். மேலும் மார்கண்டே விற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய லோகேஷ் ராகுல் தவானுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தவான் பேட்டிங்கில் சொதப்பி 14  ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் விராட் கோஹ்லி டோணியுடன் இணைந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். அதிரடியாக விளையாடிய டோனி 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி அவுட் ஆகாமல் 38 பந்துகளுக்கு 72 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 190 ரன்களை எடுத்தது.

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் ஸ்டோனிஸ் 7 ரன்களுக்கும், பின்ச் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். பின்னர் மேக்ஸ்வெல்லுடன் இணைந்த டி ஷார்ட் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரு முனையில் மேக்ஸ்வெல் மரண காட்டு காட்டி சதம் அடித்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரை ஆஸ்திரேலியா 2-1அணி என்ற கணக்கில் வென்றது.