குழந்தைகளை காருக்குள் மறந்து விட்டு சென்று தூங்கிய தாய்! திரும்பி வந்து பார்த்த போது காத்திருந்த சோகம்!

ஆஸ்திரேலியாவில் காருக்குள் இருந்த 2 குழந்தைகளை மறந்து தாய் அங்கேயே விட்டுச்சென்றதால் காரின் உஷ்ணம் தாங்காமல் மூச்சு திணறி குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கேரி ஆன் கான்லி என்பவர் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர்கள் காரில் இருந்த தனது 2 குழந்தைகளனா டார்சி கான்லி 2, மற்றும் சோலி ஆன் கான்லி 1, இருவர்களையும் மறந்து தனது காரைவிட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றுள்ளார்.

பின்னர் களைப்பாக இருந்ததால் நீண்ட நேரம் தூங்கிய பிறகு திடீரென தனது குழந்தைகளின் ஞாபகம் வந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த தாய் குழந்தைகளை காண வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது காரின் உள்ளே 2 குழந்தைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர்கள் இருவரும் காரின் உஷ்ணம் தாங்காமல் மூச்சுத் திணறியபடி மயக்க நிலையில் கிடந்தள்ளனர்.

இதையடுத்து உடனே குழந்தைகளின் தாய் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழு குழந்தைகளை மீட்ட அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் குழந்தைகள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேரி ஆன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர் இதையடுத்து அவர் வீட்டிற்கு வரும்போது போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளாரா? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் இருந்ததால் தான் குழந்தைகளை கவனிக்காமல் காரில் விட்டு விட்டு அலட்சியமாக தூங்கச்சென்று விட்டதாகவும் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.