வேலை இல்லை என்ற கவலையா? 29ம் தேதி உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு!

சென்னையில் ஆகஸ்ட் 29 ஆம்தேதி வேலைவாய்ப்பு முகாம்.


படித்து விட்டு வேலையில்லாமல் தவிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அனைவருக்கும் அரசு வேலை தர முடியாவிட்டாலும் அதற்கேற்ப தொழில் வளங்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுக்கு வேலை கிடைக்க எல்லா விதமான முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டுதான் வருகிறது. 

சென்னையை பொறுத்தவரை வேலை தேடி வரும் இளைஞர்கள் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ப வேலை கிடைக்க நாள்தோறும் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குவதும் தனியார் வேலைவாய்ப்பு மையங்களில் பணம் கொடுத்தவிட்டு வேலைக்காக காத்திருப்பதும் என வாடிக்கையாகி விட்டது. 

அப்படி வேலையின்றி தவிக்கும் இளைஞர்களுக்காக அவ்வப்போது தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற நடத்த வேலைவாய்ப்புத்துறை முடிவு செய்துள்ளது. 

இது குறித்து வேலை வாய்ப்புத்துறை ஆணையர் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய முதன்மை செயல் அலுவலர் ஜோதி நிர்மலாசாமி தெரிவிக்கையில் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வியாழக்கிழமை காலை  10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 

“மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A– 28, முதல்தளம், டான்சி கார்ப்பரேட் வளாகம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600 032” என்ற முகவரியில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திட நடைபெறும் இந்த முகாமில் 25– க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் ஜோதி நிர்மலாசாமி.

மேலும் பட்டயபடிப்பு,  பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு, செவிலியர், ஹோட்டல் மேனஜ்மெண்ட், B.arch, ITI மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள 21 வயது முதல் 40 வயது வரை உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பை பெறலாம் தெரிவித்த ஜோதி நிர்மலாசாமி முகாமில் பங்கேற்பவர்கள்  தங்கள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுயவிவர குறிப்புடன் (RESUME) கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு அவசியமில்லை எனவும் இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது எனவும் மேலும் விவரங்களுக்கு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி  044 – 22500134  வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார் ஜோதி நிர்மலாசாமி