பஸ் டயர் தான்டா எனக்கு தலையணை..! அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் அட்டகாசம்! யார் தெரியுமா?

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் மதுப்பிரியர் ஒருவர் குடிபோதையில் பேருந்து சக்கரத்தில் தலை வைத்து படுத்திருந்தவரால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.


அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மதுப்பிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு பேருந்து நிலையத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் பேருந்து நடத்துனர், ஓட்டுநனரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.  

பின்னர், தனது ரகளையை நிறுத்தி கொண்டு, பேருந்துகள் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பேருந்தில் பின்பக்க சக்கரத்தில் தலையை வைத்து தூங்கி உள்ளார்.

இதற்கிடையே, வழக்கம் போல் பேருந்து ஓட்டுநனர் புறப்படும் நேரம் வந்துவிட்டதால், பேருந்தை இயக்க முயன்று உள்ளனர். அப்போது பஸ் சக்கரத்தில் ஒருவர் தலைவைத்து படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி ஓட்டுநனர், உடனே கீழே இறங்கி, அவரை எழுப்ப முயன்றார். ஆனால் மதுபோதையில் தன்னை அறியாமல் ஓட்டுநனரிடம் தகராறு செய்தார்.

இந்நிலையில், இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள் இதுகுறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர், அறந்தாங்கி பேருந்து நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு சென்று மதுப்பிரியரை பிடித்து விசாரணை நடத்தி அப்புறப்படுத்தினர்.

பிறகு பேருந்து இயக்கிய போது, யாரும் எதிர் பார்க்காத நேரத்தில், காவல் துறையினரை மீறி திடீரென அந்த மதுப்பிரியர் ஓடி வந்து பேருந்து சக்கரத்தின் கீழ் தனது கையை வைத்துக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறு நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து, பொதுமக்கள் மற்றும் பயணிகள் காவல் துறையினரிடம் கூறுகையில், இந்த மாதரி மதுகுடித்துவிட்டு பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் நபர்கள் மீது காவல் துறையினர் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வப்போது பேருந்து நிலைய பகுதியில் ரோந்து சென்று பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.