13 வயதில் இருந்தே என் மகளை கூப்பிடுறாங்க! கடலோரக் கவிதைகள் ரேகா ஷாக் தகவல்!

ரேகா,ஆகஸ்ட் 28, 1970 இல் பிறந்தார் இவர் தமிழ் மற்றும் மலையாள நடிகை ஆவார்.1980களில் சிறந்த நடிகையாக திகழ்ந்தவர்.கேரளாவில் பிறந்து ஊட்டியில் தனது படிப்புகளை முடித்துள்ளார்.


1996 ஆம் ஆண்டில் அவர் ஜார்ஜ் ஹப்பிஸ் என்றவருடன் திருமணம் நடந்தது.அவர் கடலுணவை ஏற்றுமதி செய்பவர். இவர்களுக்கு 1998 இல் அனுஷா பெண் குழந்தை பிறந்தது. தற்போது இவர் சப்போர்ட்டிங் ரோல் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ரேகா பத்திரிக்கையாளரிடம் தனது திரைப்பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

சாதரண குடும்பத்தில் இருந்த நான் சினிமாவை பத்தி எந்த ஒரு தகவல்களும் தெறியாமல் இருந்தேன்.இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா ஐயா, 'கடலோரக் கவிதைகள் ' என்ற தமிழ் படத்தின் மூலம் தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.இதன் பின் தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளும் அதிகமான படங்களை நடித்துவந்தேன். 

தமிழில் புன்னகை மன்னன்,அண்களை நம்பாதே,நம்ம ஊரு நல்ல ஊரு,எங்க ஊரு பட்டுக்காரன் எனும் படங்களில் நடத்தேன்.பின் மலையாளத்தில் ஏய் ஆட்டோ,ராம் ஜி ராவ் ஸ்பிகிங் எனும் படங்களில் நடித்துள்ளேன். அப்போது சிலர் நான் குடும்பக் கதாப்பாத்திரங்கள் மட்டும் தான் நடிப்பேன் என்று சொல்லிவிட்டனர்.இதை நான் மிகப் பெரிதாக கருதவில்லை.அதன் பின் நானும் எந்த படத்திலிலும் நடிக்கவில்லை.

ஆனால் நான் நினைத்த கதாப்பாத்திரம் இன்னும் கிடைக்கவில்லை.நான் அழுகின்ற காட்சிகளை தவிற நெகட்டிவான வில்லி மற்றும் காமெடி கதாப்பாத்திரம் நடிக்க ஆசை தான் அந்த வாய்ப்புக்காக காத்திருப்பேன்.என் மகளுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வருது. அதில், பொண்ணுக்கும் எனக்கும் உடன்பாடில்லை" என்கிறார், ரேகா.

13 வயது முதலே என் மகளை கூப்பிடுகிறார்கள், நான் தான் நடிக்க வைக்க கூடாது என்று அனுப்பாமல் இருக்கிறேன். என் மகளுக்கு நடிக்க வேண்டும் என்று ஆசை இல்லை. இவ்வாறு ரேகா கூறியுள்ளார்.