நடிகர் ரகுவரன் மூலம் நடிகை ரோகினிக்கு பிறந்த மகன்..! தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ரகுவரனின் மகனின் புகைப்படம் ஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமாக திகழ்ந்தவர் நடிகர் ரகுவரன். கேரளாவில் பிறந்த நடிகர் ரகுவரன் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆவார். ஏழாம் மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் ரகுவரன்.

இதனைத் தொடர்ந்து மைக்கேல்ராஜ் கூட்டுப்புழுக்கள் போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்திருந்தார். ஹீரோவாக நடித்து இருந்ததைக் காட்டிலும் வில்லனாக நடித்த போது இவருக்கு கிடைத்த ரசிகர் கூட்டத்தை அளவிட முடியாது என்றுதான் கூற வேண்டும. இதுமட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களில் சம்சாரம் அது மின்சாரம் அஞ்சலி போன்ற திரைப்படங்களில் இவர் நடத்தி இருந்த நடிப்பு குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் வில்லனாக இவர் வலம்வந்த பாட்ஷா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது என்றே கூறலாம். ஏனெனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இணையாக ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் பாஷா படத்தின் பிறகுதான் இவருக்கு அமைந்தது என்று கூறினால் அது மிகையாகாது. இதற்குப் பின்பு வில்லன் கதாபாத்திரம் என்றாள் அதற்கு ரகுவரன் தான் சரியானவர் என்று ரசிகர் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டவர் இவர்தான். க

டந்த 1996ஆம் ஆண்டு ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார் திருமணமான இரண்டு ஆண்டுகளில் இவருக்கு ரிஷி என்ற ஒரு மகனும் பிறந்தார். ஆனால் திருமணவாழ்க்கை இவர்களுக்கு சரியாக அமையவில்லை என்றுதான் கூற வேண்டும் . ஏனெனில் திருமணமான ஆறே ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பின்னர் நடிகர் ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் சேத்துப்பட்டில் உள்ள தன்னுடைய இல்லத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுவரன் மறைந்தாலும் தற்போது அவரது மகனான ரிஷிவரனை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். தற்போது ரகுவரனின் மகன் ரிஷிவரனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. ரிஷிவரனை பார்த்த நெட்டிசன்கள் ரகுவரனின் மகனா இது ?என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.