சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் குறித்து சொல்லப்படும் மூட நம்பிக்கைகள் தெரியுமா?

நம் நாட்டில் மதத்தில் மட்டுமின்றி மருத்துவத்திலும் ஏராளமான மூட நம்பிக்கைகள் உண்டு. அதிலும் அறுவை சிகிச்சை குறித்தும் நிறையவே மூட நம்பிக்கைகள் நாட்டில் உலவுகின்றன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.


சிசேரியன் செய்துகொண்டவர்கள் நீர் குடித்தால் சீழ் பிடிக்கும் என்று சொல்லப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. தாகம் எடுக்கும்போதெல்லாம் போதிய அளவு நீர் பருகலாம்.

நிறைய தண்ணீர் பருகவில்லை என்றால் போதிய அளவுக்கு பால் சுரக்காது என்பதுடன் சிறுநீரகத் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டுசிசேரியன் செய்துகொண்டவர்களுக்கு தாய்ப்பால் அளவு குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுவதிலும் எந்த உண்மையும் கிடையாதுஅதேபோல் சிசேரியன் செய்துகொண்டவர்களுக்கு சீக்கிரம் தாய்ப்பால் வற்றிவிடும் என்று சொல்லப்படுவதிலும் எந்த உண்மையும் கிடையாது.

உண்மையில் அறுவை சிகிச்சையினால் ஏற்படும் காயம் தவிர சுகப்பிரசவத்திற்கும் சிசேரியனுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அதனால் இந்த நேரத்தில் தேவையற்ற மூடநம்பிக்கைகளை கடைப்பிடிக்கக் கூடாது.