சிறுமியை கதற கதற கற்பழித்த 3 பேர்! வீடியோ எடுத்து வெளியிட்ட 2 பேர்!

ஒரு சிறுமியை மூன்று பேர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய அதை மேலும் இருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.


பீகாரின் பெகுசராய் மாவட்டம் மன்சூர்சக் நகர் அருகே உள்ள ஒரு கிராமம் ஒன்றின் ஒதுக்குப் புறமான இடத்தில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த சம்பவம், அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானதையடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது

 

அந்தச் சிறுமி கடந்த 11-ஆம் தேதி மூன்று கொடூரர்களால் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டதாகவும், அதனை அவர்களின் நண்பர்களான வேறு இரு கேவலங்கள் எதிரில் நின்றுகொண்டு தங்கள் செல்ஃபோன்களில் இரு கோணங்களில் புகைப்படம் எடுத்ததாகவும் மன்சூர்சக் போலீசார் தெரிவித்துள்ளனர்

 

இதனைத் தொடர்ந்து அந்தச் சிறுமி நடந்ததை வெளியில் சொன்னால் அவரது குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கொன்றுவிடுவதாக அவர்கள் மிரட்டியதற்கு அஞ்சி அந்த சிறுமி முதலில் யாரிடமும் சொல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி குற்றவாளிகளில் ஒருவன் மீண்டும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.

 

அப் போது விடுவித்துக்கொண்டு தப்பியோடிய அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்தது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

முதலில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்தக் குடும்பத்தினர் தயங்கியதாக போலீசார் தெரிவித்தனர்

 

பின்னர் தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடூரம் சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து அது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்

 

இந்தக் குற்றத்தில் தொடர்புடைய 5 பேருமே சிறுமி வசிக்கும் அதே கிராமத்தைச்  சேர்ந்தவர்கள் தான் என்று தெரிவித்த போலீசார், காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தெரிந்துகொண்டு அவர்கள் தப்பியோடிவிட்டதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் கூறினர்.