குடும்பத்தகராறு காரணமாக பெற்ற தாயையே மகன் கொலை செய்த சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரம்பு மீறிய மகன்..! இது நியாயமா என கேட்ட பெற்ற தாய்..! ஆனால் மகன் மாயக்கண்ணன் அரங்கேற்றிய பகீர் செயல்! உசிலம்பட்டி சம்பவம்!

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள வடுகப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மனைவியின் பெயர் செல்வி. இத்தம்பதியினருக்கு மூர்த்தி மற்றும் மாயக்கண்ணன் ஆகிய மகன்கள் உள்ளனர். பிரியா என்ற மகளும் உள்ளார். மூர்த்திக்கும், பிரியாவுக்கும் திருமணம் முடிந்த நிலையில் தனியாக வசித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் மாயக்கண்ணன் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் பணியை செய்துவருகிறார். இந்நிலையில் தாய் செல்விக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. நெருங்கிய அக்கம்பக்கத்தினர் பலமுறை அவர்களுடைய சண்டையை தீர்த்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கம் போல நேற்று காலை தாய்க்கும், மகனுக்கும் இடையே சண்டை வலுத்தது. ஆத்திரமடைந்த மாயக்கண்ணன் தன்னுடைய சொந்த தாயார் என்றும் பாராமல் கிடைத்த அரிவாள்மனையை எடுத்து செல்வியை பலமாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் செல்வியின் உடனே மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்கு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தாயை கொலை செய்த குற்றத்திற்காக மாயக்கண்ணனை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது வடுகப்பட்டி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.