நைட்டியுடன் கூவத்தில் மிதந்த இளம் பெண் உடல்! பார்த்து அதிர்ந்த மக்கள்! சென்னை பரபரப்பு!

கூவம் ஆற்றில் இளம்பெண் சடலமாக மிதந்துள்ள சம்பவமானது சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


எழும்பூரிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை செல்லும் வழியில் இளம்பெண் ஒருவர் இன்று காலை சடலமாக கரை ஒதுங்கினார். பதறிப்போன பொதுமக்கள் அப்பகுதி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு துறையினரின் உதவியோடு காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டெடுத்தனர். மேலும் அந்த பெண் வெள்ளை நிறத்தில் இருந்ததாகவும், நைட்டி அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. தாலி போன்ற அணிகலனையும் அணிந்திருந்துள்ளார். 

அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா, இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அந்த பெண்ணின் உடலை காவல்துறையினர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன பெண்களின் பட்டியலை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் எந்த பெண்ணாவது சடலமாக கிடைத்த பெண்ணாக இருக்கலாம் என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர். 

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.