காசியிலும் கங்கையிலும் இத்தனை அதிசயங்களா..? படிச்சா அசந்தே போவீங்க.

பாரத தேசத்தில் இருந்த அரசர்கள், மக்கள் விரும்பும்படி காசியில் அப்படி என்ன இருக்கிறது..?


அங்கே ஐந்து அதிசயங்கள் நடக்கிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம். அவை… 1) பல்லி சப்தம் எழுப்பாது…காசியில் பெரிய அளவில் பல்லிகள் உண்டு. ஆனால் அவை சப்தம் எழுப்புவதில்லை. நம் மக்கள் பல்லியின் சப்தத்தை சகுனமாக எடுப்பவர்கள். காசியில் அதற்கு இடமில்லை.

2) பிணம் நாற்றம் எடுக்காது… பிணம் எரியும் பொழுது பக்கத்தில் நின்று இருக்கிறீர்களா..? பிணத்தின் கேசமும், இரத்தம், சதை மற்றும் தோல் எரியும் பொழுது அதிலிருந்து வரும் வாடை வார்த்தையால் விளக்க முடியாது! இதைத்தான் பிண வாடை என சொல்வழக்கில் கூறுவார்கள். ஆனால், இங்கே பிணம் எரியும் பொழுது அருகில் நின்றால் எந்த விதமான நாற்றமும் இருக்காது!

3) கருடன் வட்டமிடாது….காசியில் கங்கை கரையில் பிணங்கள் எரிக்கபட்டாலும், உணவுகள் சிதறிக்கிடந்தாலும் இறைக்காக கருடன் (வெண்கழுத்து கழுகு) வட்டமிடுவதில்லை. கருடன் அங்கே பறந்து செல்லும். ஆனால், வட்டமிடாது! காசியில் காக்கையும் கிடையாது!

4) பூ மணக்காது…. இது உங்களுக்கு கொஞ்சம் மிகுதியாகத்தான் தெரியும். என்ன செய்ய காசியில் அப்படித்தான் இருக்கிறது. தென்நாட்டில் கிடைக்கும் பூக்கள் வடநாட்டில் கிடைக்காது. முக்கியமாக மல்லி, முல்லை இவைகள் கிடைக்காது. ஆனால் சாமந்தி பூ அதிகமாக கிடைக்கும்.

தென்நாட்டில் சாமந்திபூவை மலர்வளையத்தில் மட்டுமே வைப்பார்கள். சாமந்திப்பூவில் ஒருவிதமான நெடி இருக்கும். பலருக்கு இந்த பூவின் வாசம் பிடிக்காது. அதனாலேயே நம் ஊரில் பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் காசியில் இந்த பூக்கள் அதிகம் கிடைக்கிறது. ஆனாலும் அவை வாசம் இல்லாமல் காகிதப்பூ போல இருக்கிறது. வெளியூரில் விளையும் பூக்களை கொண்டு சென்றால் காசியில் மணக்கும். ஆனால் ‘காசி பூக்கள்’ மணப்பதில்லை!

5) பால் வற்றாது…..இங்கே பசுக்கள் இறைவனைவிட அதிகமாக மதிக்கப்படுகிறது. பசுக்கள் கட்டப்படுவதில்லை. பசுவிடம் தேவையான பால் கிடைத்தவுடன் அவற்றை விட்டுவிடுகிறார்கள். பசுக்கள் யாரையும் முட்டுவதோ உதைப்பதோ இல்லை. மனிதனை கண்டு மிரளுவதில்லை. சில கடைகளுக்கு சென்று அங்கே இருக்கும் உணவை தின்று கடை முதலாளியை கதற செய்யும். இங்கே யாரும் பசுவை துன்புறுத்துவதில்லை!

பல வருடங்களாகவும், இன்றும் இயற்கையாகவே இந்த ஐந்து விஷயங்கள் நடக்கிறது!!