இதை எடுத்துகிட்டு ரூ.500 கொடுங்க போதும்! ஹாஸ்பிடல் வாசலிலேயே 22 வயது பிரியா செய்த வேலை! அதிர்ந்த போலீஸ்!

ஸ்டான்லி மருத்துவமனையில் வரும் நோயாளிகளிடம் மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வடசென்னையில் அமைந்திருக்கும் முக்கிய மருத்துவமனைகளில் ஸ்டான்லி மருத்துவமன ஒன்று. இந்த மருத்துவமனையில் எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழியும். இந்த மருத்துவமனையில் வரும் நோயாளிகளிடம் பெண் ஒருவர் மிகவும் நெருக்கமாக பேசி வந்துள்ளார். 

முகம் தெரியாத நபர்கள் இடமும் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி "என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. மிகவும் மோசமான நிலையில் உள்ளார். சேமித்து வைத்த பணம் அனைத்தையும் செலவழித்து விட்டேன். தயவுசெய்து இந்த தங்க நாணயத்தை வாங்கிக்கொண்டு 500 ரூபாய் மட்டும் தாருங்கள்" என்று பலரிடமும் கேட்டுள்ளார்.

பொதுமக்களும் பரிதாபப்பட்டு அந்தப் பெண்ணுக்கு காசு அளித்துள்ளனர். அதன்பின்னர்தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். அந்த நாணயம் கவரிங் நாணயம் என்று சிலர் கண்டுபிடித்துள்ளனர். இதே போன்ற புகார்கள் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் அடுத்தடுத்து குவிய தொடங்கின.

உடனடியாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சேர்ந்த பிரியா என்ற 22 வயது பெண் தான் இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலும் ஒரு திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. 1 வாரத்திற்கு முன்பாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த முதியவரிடம், "இரவு நேரங்களில் இதுபோன்ற இடங்களில் நகைகளை அணியாதீர்கள். தயவுசெய்து கைப்பைக்குள் வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த முதியவரின் கைப்பையை திருடி 3 பவுண்ட் மதிப்பான தங்க சங்கிலியை திருடியுள்ளார்.

கொள்ளை சம்பவங்களில் பிரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை சிறையிலடைத்துள்ளனர். இந்த சம்பவமானது ஸ்டான்லி மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.