நடுக்காட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்! அருகே ஆணின் செருப்புகள்! தொப்பி! புதுக்கோட்டையை உறைய வைத்த சம்பவம்!

ஆடு மேய்க்க சென்ற பெண் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமானது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தாம்பூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள தேனிப்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். முருகேசன் மனைவியின் பெயர் பானுமதி. பானுமதியின் வயது 45. இவர் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார். தென்திரையன்பட்டியில் உள்ள ஆர்.எஸ். பதி எனும் கிராமத்தில் வழக்கமாக ஆடு மேய்க்க செல்வார்.

நேற்று அதேபோன்று பானுமதி ஆடு மேய்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார். ஆனால் மாலை நேரத்தில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளன. இதனால் பதறிப்போன உறவினர்கள் பானுமதியை தேடி அடைந்துள்ளனர். 

அப்போது அவர் தென்திரையன்பட்டி காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். உடனடியாக உறவினர்கள் அப்பகுதி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பானுமதியின் உடலை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் பானுமதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது உறுதியாகிவிட்டது. கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.