கள்ளக்காதல் செய்த பெண் உயிரோடு எரித்துக் கொலை! உறவினர்களே தீர்த்துக்கட்டிய பயங்கரம்!

இராமநாதபுரத்தில் 20 வயது பெண் ஒருவர் எரிந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அமைந்துள்ளது. இங்குள்ள டி.வல்லக்குளம் என்னும் கிராமத்தில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயது மதிக்கத்தக்க ராதிகா என்ற மகள் உள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களில் இவர் தன் கணவனை பிரிந்தார். 2 ஆண்டுகளாக அவர் தன் தந்தையான மாயாண்டியின் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

இவர் கடந்த மாதம் ஏப்ரல்-28 ஆம் தேதியன்று மாலை 4 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் மாயாண்டி அபிராமப்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் ஏப்ரல்-30   ஆம் தேதியன்று டி.வல்லக்குளம் கால்வாய் அருகில் ராதிகா பிணமாக கிடப்பதாக அபிராமப்புரம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே காவல்துறையினர் அங்கு வந்து அவரின் உடலை கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அது கொலையா இல்லை தற்கொலையா என்றவாறு காவல்துறையினர் விசாரணையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது ராதிகா தகாத உறவு வைத்துக்கொண்டு வந்துள்ளார் என்றும் இதனை சில ஆண்டுகளாக அவள் கணவரின் உறவினர்கள் அவரை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் அவர் அதையே தொடர்ந்ததால் அவர் மீது மிகவும் கோபம் கொண்ட அவளின் உறவினர்களுள் 6 பேர் அவளை அடித்து உதைத்து எரித்து கால்வாயில் வீசியுள்ளனர் என்றும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.